For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சும்மா போன ஆட்டு மந்தைக்குள் புகுந்தது மினி லாரி… துடிதுடிக்க 40 ஆடுகள் பலி: வீடியோ

சாலையோரம் சென்று கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் மினி லாரி புகுந்ததால் 40 ஆடுகள் துடிக்கத் துடிக்க உயிரிழந்தன. ஆடுகளை ஓட்டிச் சென்றவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Google Oneindia Tamil News

கோபிச்செட்டிப்பாளையம்: ஆட்டு மந்தைக்குள் திடீரென மினி லாரி புகுந்ததால் 40க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அன்றாடம் ஆடுகளை மேய்த்துவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.

40 goats killed in mini lorry accident

சம்பவத்தன்று, கோவையில் இருந்து கோபிச்செட்டிப்பாளையத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு மருதச்சாலம் அதே சாலையின் ஓரமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் வந்து கொண்டிருந்த மினி லாரி திடீரென ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதனால் மந்தையில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆடுகள் துடிதுடிக்க உயிரிழந்தன.
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மருதாச்சலம் மீதும் மினி லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

English summary
40 goats and a man were killed in mini lorry accident near Gobichettipalayam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X