ராமமோகன் ராவின் ஆந்திரா வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 44 கிலோ தங்கம் சிக்கியது!
ராமமோகன்ராவின் சித்தூர், விஜயவாடா வீடுகளில் 44 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சித்தூர்/விஜயவாடா: தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவின் ஆந்திரா வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 44 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவிடம் சிக்கியுள்ள கான்டிராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள ராமமோகன் ராவ் வீடுகளிலும் இச்சோதனை நடைபெறுகிறது,
IT seized 26lakhs and 4kg gold from RamaMohana Rao's Chittoor residence ; 40kg gold seized from Rao's relative residence at Vijayawada #Raid
— Manoj SavarimuthuRaj (@manojprabakar4) December 21, 2016
ராமமோகன் ராவின் விஜயவாடா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. அதேபோல் சித்தூரில் உள்ள ராமமோகன் ராவின் வீட்டில் ரூ26 லட்சம் ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சேகர் ரெட்டி வீட்டில் ரூ171 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.