குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு.. விழிப்புணர்வுக்காக சென்னையில் மெகா இசை நிகழ்ச்சி
சென்னை சாந்தோம் செயின் பீட்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை: குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரே இடத்தில் கூடி கீ போர்டு இசைத்த மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அரங்கில் மே தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் விதமாகவும் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் 440க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கீ போர்டு வாசித்தனர்.
நிகழ்ச்சியில் ரகுபதி ராகவ ராஜாராம், தாய் மண்ணை வணக்கம், அச்சம் அச்சம் இல்லை போன்ற பாடல்களின் இசையை கீ போர்டு மூலம் வாசித்து அசத்தினர். இதற்கு முன்பு 400 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து கீ போர்டு வாசித்ததே சாதனையாக இருந்தது.