திருப்பூரில் இன்று துவங்கியது 45-வது கோடைகால தேசிய பின்னலாடை கண்காட்சி!
திருப்பூரில் 3 நாள் தேசிய பின்னலாடை கண்காட்சி இன்று துவங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் 3-நாள் தேசிய பின்னலாடை கண்காட்சி இன்று சிறப்பாக துவங்கியது.
திருப்பூரில் 45-வது கோடைகால உலக அளவிலான தேசிய பின்னலாடை கண்காட்சி இன்று துவங்கியுள்ளது. அவினாசி சாலையில் உள்ள ஐ.கே.எப்.வளாகத்தில் இந்த கண்காட்சியை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ரிப்பன் வெட்டியும் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் அகில இந்திய தலைவர் மகு,குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர் வகை ஆடைகள் மற்றும் காட்டன், லெனின் காட்டன் ஆடைகள் அடங்கிய 40 கம்பெனிகள் அரங்குகளை அமைத்துள்ளனர். இந்த கண்காட்சியை காண இஸ்ரேல்,கனடா,ஆஸ்ட்ரேலிய,சிங்கப்பூர்,அமேரிக்கா,மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 பையர்ஸ் மற்றும் 40 க்கும் மேற்ப்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சி நாளையும்,நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.