For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கொட்டும் மழையிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய 46 பேர் மீது வழக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தொடர்ந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போலீசார் நடத்திய வாகன சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 46 பேர் பிடிபட்டுள்ளனர்.

சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு விடிய,விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிடி ஆணை ரவுடிகளை மடக்கிப்பிடித்து கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

46 people drunk and drive in Chennai

அந்த சோதனை வேட்டையில் சந்தேக நபர்களையும் பிடித்து விசாரிப்பார்கள். போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்கு போட்டு அபராதம் வசூலிப்பார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதுபோல் நடந்த வாகன சோதனையில் 510 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். போதை ஆசாமிகள் 46 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
police trapped 46 people for drunk and drive in Chennai on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X