For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரபலி கொடுப்பற்காக சிறுவனைக் கடத்த முயற்சி - 5 மந்திரவாதிகளுக்கு தர்ம அடி

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் அருகே நரபலி கொடுப்பதற்காக சிறுவனைக் கடத்த முயன்ற மந்திரவாதிகள் 5 பேரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

நாமக்கல் அருகே கோணங்கிப்பட்டி கிராமத்தில் புதையல் இருப்பதாக கூறி 3 ஆண் மற்றும் 2 பெண் மந்திரவாதிகள் வந்துள்ளனர். அங்கு வீடு எடுத்து தங்கி அவர்கள் புதையலைத் தேடியுள்ளனர். இரவு நேரத்தில் பூஜைகள் செய்து வந்த அவர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

5 arrested for kidnapping a boy

இந்நிலையில், மனவளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவனை நரபலி கொடுப்பதற்காக மந்திரவாதிகள் கடத்த முற்பட்ட போது பொதுமக்களிடம் சிக்கினர். அவர்கள் 5 பேருக்கும் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவர்களைப் போலீசில் ஒப்படைத்தனர்.

முன்னதாக ஊரில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் உள்ளனரா என அந்த மந்திரவாதிகள் கண்காணித்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

English summary
Near Namakkal the police have arrested 5 persons for kidnapping a boy and tried to kill him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X