நெல்லை அருகே பயங்கரம்... சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார்... 5 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே நான்கு வழிசாலையில், சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழி சாலையில் மாலை நாகர்கோவில் நோக்கி கார் ஓன்று வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள வளைவில் கார் திரும்பிய போது அந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியில் ஓருவர் இறந்தார். இவர்களை பற்றிய விபரம் தெரியவில்லை. சம்பவம் குறிதது அறிந்ததும நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைநது வ்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் கிறிஸ்து அடிமை, சுமா, திவ்யா, சிலுவை அடிமை, கார் டிரைவர் ஜோஸ் எனத் தெரிய வந்தது. படுகாயம் அடைந்தவர்கள் விபரம் - ஸ்டெல்லா மேரி, ஜினஷா, ஷாலினி, ஜினி, ஜீவன்பால், ஜோஸ்டோல். இவர்களில் 6 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகி்ச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். கின்ஸ்னி, ஜானபால் ஆகிய இருவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.
விபத்தில் சிக்கிய அனைவரும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.