5 மாத குழந்தையின் கழுத்து, காதை அறுத்து வீட்டு வாசலில் வீசிய மர்மநபர்.. திருவள்ளூர் அருகே கொடூரம்
5 மாத குழந்தையின் கழுத்து, காது அறுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5 மாத குழந்தையின் கழுத்து, காது அறுக்கப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் பதற வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்த 5 மாத குழந்தையை தூக்கி கொண்டு போயுள்ளான். பின்னர், அக்குழந்தையின் கழுத்தையும், காதையும் கொடூரமாக அறுத்துள்ளான். பின்னர் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து அதே வீட்டின் வாசலில் வீசியெறிந்து சென்றிருக்கிறான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வீசப்பட்ட குழந்தையை கண்டதும் குடும்பத்தார் அலறியடித்து ஓடிவந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டினுள் நுழைந்தது யார், எதற்காக குழந்தையிடம் இப்படி வெறித்தனம் காட்டப்பட்டது என்பதெல்லாம் தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும். 5 மாத குழந்தையிடம் இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட இந்த அரக்கத்தனமான சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.