For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுலா பயணிகளை போல ஒகேனக்கல்லில் பதுங்கியிருந்த 5 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

தருமபுரி: ஓகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

5 rowdies arrested in Hogenakkal

இதையடுத்து கன்னியாகுமரி போலீசார், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரின் உதவியுடன், லாட்ஜ் ஒன்றில் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, லாட்ஜில் பதுங்கியிருந்த ஐந்து ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரவுடிகள் தப்பியோடாமல் இருக்க துப்பாக்கியை காண்பித்து மிரட்டி காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
5 rowdies were arrested in Hoganakal at Darmapuri district in this morning. Arrested persons involved notorious crimes, including murders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X