சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, தூத்துக்குடி, குமரி, தஞ்சைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்கள்!!
சென்னை: மழைவெள்ளத்தால் மூடப்பட்ட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ரயில் சேவைகள் தொடங்குகின்றன. மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூருக்கு இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சென்னையில் பல இடங்களில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து நாளை வரை சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் முழுமையாக மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனிடையே சென்னையில் வெள்ளம் வடிந்த நிலையில் இன்று இரவு 4 சிறப்பு ரயில்களை தென்மாவட்டங்களுக்கு இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் விவரம்:
வண்டி எண் 06155 சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசியில் நின்று செல்லும்.
வண்டி எண் 06156 சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நின்று செல்லும்.
வண்டி எண் 06150 சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இரவு 9.30 மணிக்கு இந்த ரயில் புறப்படும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புர, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி மற்றும் மிலாவிட்டானில் நிற்கும்,
Spl train TONIGHT frm EGMORE; to Kanyakumari, Madurai, Tirunelveli,sencottai, Tanjore #ChennaiRainsHelp #chennairain pic.twitter.com/JprWBdQm3v
— BenHur (@gbenhur) December 4, 2015
வண்டி எண் 06154 சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசியில் நின்று செல்லும்.
வண்டி எண்: 06157 சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தஞ்சாவூருக்கு இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் நின்று செல்லும்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.