எத்தியோப்பியாவில் 5 கும்பகோணத்துக்காரர்கள் பலி: குடும்பத்தார் கலெக்டரிடம் மனு
கும்பகோணம்: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 5 பேரின் விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தக் கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணா, வேல்ராஜ் மோகன், தேவதாஸ், தெய்வேந்திரன், முருகானந்தம் ஆகியோர் எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்ததில் அந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
5 பேரும் உயிர் இழந்தது பற்றி எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
The families of the 5 Kumbakonam based men who got killed in Ethiopia have given a petition to the collector.