தமிழகத்தில் டெங்குவுக்கு இன்று 5 பேர் பலி... பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!
டெங்குவுக்கு இன்று மட்டும் 5 பேர் பலியாகிவுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்க்கு இன்று மட்டும் 5 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அன்றாடம் பலி தொடருகிறது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தப் போதிலும் டெங்கு பாதிப்பு என்பது ஓயாமல் இருந்து வருகிறது.
எய்ம்ஸ் குழு ஆய்வு
எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மத்திய மருத்துவ குழு ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் நேற்று சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் புதுவையில் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று எத்தனை பேர்
டெங்குவால் பாதிக்கப்பட்டு நேற்று 3 பேரும், நேற்று முந்தைய தினம் 9 பேரும் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். இன்று 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் கடந்த 13 நாள்களில் 130 பேரை காவு கொண்டுள்ளது டெங்கு. இதுமட்டுமல்லாமல் வேறு சில மர்மக் காய்ச்சலுக்கும் மக்கள் பலியாகின்றனர்.
5 பேர் பலி
வத்தலகுண்டு அருகே நடகோட்டை பகுதியைச் அம்பிகா, திருசெங்கோட்டில் அணிமூரில் விவசாயி செந்தில், ஆரணி லாடப்பாடி கிராமத்தில் கோபால் என்பவரின் மகள் சாதனா, மதுரை மதுச்சியத்தில் உள்ள கார்த்திகா (21), நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த மைதிலி ஆகிய 5 பேர் இன்று பலியாகினர்.
அரசு மீது புகார்
இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் முழு நேரமும் செயல்படக் கூடிய அளவுக்கு மருத்துவர்கள் இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.