For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 50 நாய்கள் எரிப்பு: நம்ம த்ரிஷா கூட கண்டுக்கவில்லையே

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே 50 நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து விலங்குகள் பிரியையான நடிகை த்ரிஷா கூட குரல் கொடுக்கவில்லையே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்தார்.

50 dogs burnt near Chennai: Where is Trisha?

இதையடுத்து அஸ்வத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த நாய்களின் உடல்களை வீடியோ எடுத்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் உயிர். எங்காவது தெரு நாய்க்கு அடிபட்டுவிட்டது என்று கேட்டால் கூட கண் கலங்கிவிடுவார். விலங்குகளுக்கு அநீதி நடந்தால் உடனே குரல் கொடுப்பார்.

அப்படிப்பட்ட த்ரிஷா அதுவும் அவருக்கு பிடித்த நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து இதுவரை கண்டுகொள்ளவில்லை. அவர் மோகினி படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ இல்லையோ என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Does animal lover Trisha know that 50 dogs are burnt alive near Chennai?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X