+2 தேர்வில் 50 சிறைக்கைதிகள் பாஸ்; 870 மதிப்பெண் பெற்ற கொலை வழக்கு சிறைவாசி
சென்னை: +2 தேர்வில் மாணவர்கள் பெற்ற சாதனையை போலவே சிறையிலுள்ள கைதிகளும் சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 58 கைதிகள் கடந்த மார்ச் மாதம் நடந்த +2 தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
இதில், தேர்வு எழுதிய 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 6 பேர் தோல்வி அடைந்தனர். 2 பேர் தேர்வு எழுதவில்லை.
இவர்களுள், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி சுந்தரம் 1,200-க்கு 870 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தேர்ச்சி பெற்ற அனைவரும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக பட்டம் படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் கல்வி பெற சிறை நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என, கோவை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.