எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா : இரண்டாம் கட்டமாக 52 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி இரண்டாம் கட்டமாக 52 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாவையொட்டி ஏற்கனவே 67 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யப்பட்ட நிலையில்,மேலும் 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து அதற்கான செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே முதற்கட்டமாக 67 கைதிகள் கடந்த ஜூன் 6 தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 44 ஆண் கைதிகள் மற்றும் 8 பெண் கைதிகளும் அடங்குவர்.