For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 6 பெண்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலை அருகே சோகம்!

திருவண்ணாமலை, செங்கம் அருகே இடி தாக்கி கட்டிடம் இடிந்த விபத்தில் 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவாநாயக்கர்பேட்டை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 6 killed in building collapse in Chengam

இன்று மாலையில் திடீரென புகைக் கூண்டு மீது இடி விழுந்தது. இதனால் புகைக்கூண்டு இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
6 killed in building collapse in Chengam, Thiruvannamalai districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X