For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக்கி சில்லறை கொடுக்க திரும்பிய அடுத்த விநாடி.. பெட்டிக்கடை பெண்ணுக்குக் கிடைத்த ஷாக்!

பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை 2 மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பெட்டிக்கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய மர்மநபர்கள் 2 பேர், அந்த கடை உரிமையாளரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.

குலசேகரம் அருகே இஞ்சக்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. 60 வயதான இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு 2 பேர் பைக்கில் வந்தனர். சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி அவற்றினை வாங்கி கொண்டனர். அந்த பொருட்களுக்கான பணத்தினை சரோஜாவிடம் இருவரும் கொடுத்தனர்.

6 sovereign chain snatched from woman in Kanniyakumari

அதனை பெற்றுக் கொண்ட கடை உரிமையாளரான சரோஜா, மீதி சில்லரை காசுகளை அவர்களிடம் எடுத்து கொடுக்க திரும்பினார். அப்போது அந்த 2 நபர்களும் சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க சங்கலியையும் பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பி சென்றனர்.

இதனால் நிலைகுலைந்தும், அதிர்ச்சியும் அடைந்த சரோஜா, குலசேகரம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பைக்கில் வந்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
6 sovereign chain snatched from woman in Kanniyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X