ஆலந்தூரில் சூடு பறக்க துவங்கி மந்தமாக முடிந்த தேர்தல்.... 63.98% வாக்குப்பதிவு
சென்னை: ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு இன்று நடந்த தேர்தலில் 5 மணி நிலவரப்படி 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்றது. அத்துடன் சேர்த்து சென்னை ஆலந்தூர் சட்டசபைக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
பலத்த எதிர்பார்ப்புகளுடன் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. கிட்டத்தட்ட 316 மையங்களில் ஆலந்தூர் இடைத்தேர்தல் நடைபெற்றது .
இச்சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஎன்பி வெங்கட்ராமன், திமுக வேட்பாளர் ஆர்எஸ்பாரதி, காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநிசங்கரன், காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், காலை 9 மணிக்கு பதிவான வாக்கு நிலவரப்படி 11 சதவீத ஓட்டுகளும், 11 மணி நிலவரப்படி 11 மணியளவில் 27.6 சதவீத ஓட்டுகளும், 1 மணி நிலவரப்படி 40 சதவீத ஓட்டுகளும், 3 மணி நிலவரப்பட
45.1 சதவீத ஓட்டுகளும் பதிவானதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து கடைசியாக 63.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.