குழந்தைக்கு மறக்காம போலியோ சொட்டு மருந்து போடுங்க – ஜன. 18 மற்றும் பிப். 22ல் நடக்கிறது!
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 18 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், "மாநகரப் பகுதியில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.
இப்பணியில் சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.