For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைக்கு மறக்காம போலியோ சொட்டு மருந்து போடுங்க – ஜன. 18 மற்றும் பிப். 22ல் நடக்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 18 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

67.5 lakh children given pulse polio drops in Tamil Nadu

மேற்கூறிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், "மாநகரப் பகுதியில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.

இப்பணியில் சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
The state health department administered pulse polio drops to nearly 67.5 lakh children across Tamil Nadu on Sunday. Following this, the public health department has decided to conduct a two-day door-to-door inspection to see if all the infants in the state have received vaccination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X