For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டு தண்டனை காலத்தை நிறைவு செய்த 67 ஆயுள் கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை!

10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது.

67 prisoners released from Puzhal jail

அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைகாலம் நிறைவுசெய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 பேர் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் விழாவாக நடத்தி 67 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

English summary
67 prisoners has been released from Puzhal jail. 67 prisoners who completes 10 years in jain they have been released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X