For Daily Alerts
Just In
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 69 பேர் பாதிப்பு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 69 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி முதல்வர் சித்தி அத்தைய முனவரா அளித்த பேட்டி வருமாறு: நெல்லை மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் 19 பேரும் பெரியவர்கள் 50 பேர் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் டெங்குவால் பதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்று டெங்கு பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் வெளியில் சிகிச்சை அளிக்காமல் இருக்கவைத்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் நிறுவனம் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த வாரம் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலின் பேரில் 2 ஊழியர்கள் பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
69 People affected with dengue in Nellai district, says medical collage principal.
Story first published: Saturday, November 25, 2017, 20:28 [IST]