தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் அதிரடி இடமாற்றம்!
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த ஆர். ராமகிருஷ்ணன் கிருஷ்ணகிரி மாவட் டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ் நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த பிரவேஷ்குமார் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர துணை ஆணை யராக இருந்த ஏ.ஜி.பாபு மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இருந்த ஜெ.குணசேகரன் ஆவடி சிறப்பு காவல் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி.ராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருநெல் வேலி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணை யராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிமுத்தாறு சிறப்பு காவல் துணை கமாண்டன்ட் ஆக இருந்த எஸ்.செல்வராஜுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக கூடுதல் கண்காணிப் பாளராக இருந்த எஸ்.எம்.முகம்மது இக்பால் பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.