For Daily Alerts
Just In
ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி!!
பெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு அவர்களைத் தாக்கியது.
இதனால் 2 தொழிலாளர்களும் தங்களைக் காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 5 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் விஷவாயு தாக்கியதில் 7 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
7 labourers died of gas leak at Perundurai Sipcot Septic tank, near Erode on Tuesday.
Story first published: Tuesday, March 18, 2014, 11:44 [IST]