For Daily Alerts
Just In
புதுச்சேரியில் ஒரே நாளில் 7 தற்கொலைகள் – போலீசார் விசாரணை!
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்கு தாமதமாக வந்ததை தாய் தட்டிக் கேட்டதால் மாணவி சந்தியா தற்கொலை செய்துள்ளார். படிக்கச் சொல்லி தந்தை திட்டியதால் பி.டெக் மாணவர் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
சாமி கும்பிடுமாறு தாய் கேட்டதால் கூலித் தொழிலாளி கார்த்திக்ராஜாவும், உடல் உபாதை காரணமாக குமாரி, சிவசங்கரி தூக்கிட்டு உயிழந்துள்ளனர். கணவரின் பாலியல் வன்கொடுமை காரணமாக ரத்தினம்மாள் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தற்கொலைகள் குறித்து புதுச்சேரி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
English summary
Seven members got suicide in Puducherry in same day. Police filed case and investigating about the suicides.
Story first published: Saturday, November 15, 2014, 13:42 [IST]