For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

65 வயது காமாட்சி பாட்டியின் கள்ளக்காதல்.. அரிவாளால் வெட்டித் தள்ளிய வையாபுரி தாத்தா!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே 65 வயது பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதை அறிந்த அவரது 70 வயதுக் கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார்.

பாலப்பட்டி என்ற ஊரில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தத் தாத்தாவின் பெயர் வையாபுரி. இவரது மனைவி பெயர் காமாட்சி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரையும் கட்டிக் கொடுத்து விட்டனர். வெளியூர்களில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே லடாய் ஏற்பட்டு இருவரும் தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 45 வயதான செல்வன் என்ற கொத்தனாருக்கும், காமாட்சிப் பாட்டிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனியாக இருந்த காமாட்சிப் பாட்டியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார் செல்வன்.

இதை அறிந்த வையாபுரி ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் நேற்று காலங்கார்த்தாலேயே காமாட்சியும், செல்வனும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைப்பார்த்து வையாபுரி ஆத்திரத்தின் உச்சிக்கேப் போய் விட்டார்.

காலையிலேயே ஆரம்பித்து விட்டீர்களா என்று கோபத்தில் அரிவாளை எடுத்து காமாட்சியை சரமாரியாக வெட்டினர். தடுத்த செல்வனையும் வெட்டினார். இதனால் செல்வன் ஓடி விட்டார். காயமடைந்த காமா்ட்சியை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த செல்வன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளார். வையாபுரியை போலீஸார் கைது செய்தனர்.

English summary
In Paramathi Vellore a 70 year old man hacked his wife for having affairs with a mason at the age of 65.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X