ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.5 சதவீத வாக்குகள் பதிவு.. யாருக்கு அள்ளி கொடுத்திருப்பாங்க?
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குப் பிறகு நேற்று ஒரு வழியாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77.5 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.28 லட்சம் பேரில் 1.76 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். ஆண்கள் - 83,994, பெண்கள் - 92,867, மூன்றாம் பாலினத்தவர் - 24 பேர் வாக்களித்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல்களை காட்டிலும் இம்முறை ஆர்கே நகரில் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் யாருக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்திருப்பார்கள் ஆர்கே நகர் மக்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.