For Quick Alerts
For Daily Alerts
Just In
விராலிமலை அருகே ஆம்னி பேருந்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்-ஒருவர் கைது
விராலிமலை அருகே ஆம்னி பேருந்தில் 8 கிலோ கடத்தல் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: சென்னைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ தங்கத்தினை விராலிமலையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர், சூளக்கரையிலிருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், விராலிமலை அருகே சென்று கொண்டிருந்த அந்த ஆம்னி பேருந்தை போலீசார் வழிமறித்து அதில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடத்தப்படவிருந்த 8 கிலோ தங்கத்தினை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்திய அந்நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தங்கம் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார் என அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
The Central Revenue Intelligence Unit police got confidential information that gold was being smuggled from Omni bus to Chennai. On that occasion, the Omani bus was passing by near the Viralimalai police and checked the test.The arrested were arrested and arrested for attempting to smuggle 8 kg gold.
Story first published: Thursday, May 3, 2018, 11:23 [IST]