For Daily Alerts
Just In
கிரானைட் வெட்ட வெட்டக் கிளம்பும் “பூதங்கள்” – பி.ஆர்.பி நிறுவனம் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி நிறுவனத்தின் மீது புதியதாக மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் சாகயம் ஐஏஎஸ் பரிந்துரையின் பேரில் ஒத்தக்கடை காவல் துறையினர் 100க்கும் மேற்பட்ட புகார்களை விசாரித்து வருகின்றனர்.
இதில் புது தாமரைப்பட்டி மற்றும் திருமோகூர் பகுதியில் நிலங்களை மிரட்டி வாங்கியது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தின் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சகாயம் குழுவினர் பரிந்துரைத்த புகார்களில் இதுவரை மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகளும், ஒத்தக்கடை காவல்நிலையத்தில் 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Comments
English summary
Sagayam IAS granite scam team was filed 8 more cases on PRP granite firm.
Story first published: Tuesday, March 31, 2015, 13:48 [IST]