For Daily Alerts
Just In
இலங்கை கடற்படை அட்டூழியம்... 8 தமிழக மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகை: யாழ்ப்பாணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 8 நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வம், முகேஷ், ராஜசேகர், வினோத், செந்தில், ரமேஷ்குமார், சக்திவேல் உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி அந்த 8 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தங்களது எல்லை குறித்த விளக்கப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டியதாக குறிப்பிட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.
Comments
English summary
8 Tamil fishermen was arrested by srilankan navy for border crossing.
Story first published: Saturday, June 24, 2017, 14:15 [IST]