கோவையில் மீண்டும் குட்கா குவியல்.. 840 கிலோ பறிமுதல்.. 2 பேர் அதிரடி கைது!
கோவையில் 840 கிலோ கடத்தல் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுது.
Recommended Video
கோவை: கோவையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்காவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து இன்று காலை அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெங்களூரில் இருந்து வந்த இரு சரக்கு வேன்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் வேன் ஓட்டுநர்கள் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அதிகாரிகள் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில் அதில் 840 கிலோ குட்கா கடத்தி பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவற்றினை பறிமுதல் செய்ததுடன், கடத்தி வரப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஓட்டுனர்கள் பாப்பு, அசோக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.