85 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு: ராமநாதபுரம் கூடுதல் எஸ்பியாக வெள்ளைத்துரை நியமனம்…
தமிழகம் முழுவதும் காவல்துறையில் சேவைக்கு ஏற்பவும், அவ்வப்போது ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் வகையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் தற்போது தமிழகத்தில் 90க்கும் மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்த காரணத்தால் பதவி உயர்வு தள்ளிப்போனது.
தற்போது வழக்குகள் முடிவுக்கு வந்த நிலையில் 85 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைத்துரை டி.எஸ்.பி
மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த வெள்ளைத்துரை ராமநாதபுரம் கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜை சமயத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆல்வின் சுதன் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் மானாமதுரை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார் வெள்ளைத்துரை. இன்னும் சில நாட்களில் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி உள்ளிட்ட சாதி சமய விழாக்கள் நடைபெற உள்ளன. இதனையொட்டி ராமநாதபுரத்திற்கு கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் வெள்ளைத்துரை.
சென்னையிவ்ல கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற உதவி கமிஷனர் ஜூடு துரைப்பாண்டியன் மத்திய குற்றப்பிரிவுக்கும் ஜெகவர்சாலி, போலீஸ் அகாடெமி கூடுதல் எஸ்.பியாகவும் பதவி உயர்வு பெற்றனர்.
மேலும் தற்போது கூடுதல் எஸ்.பியாக உள்ள 13 பேருக்கு எஸ்.பியாக பதவி உயர்வு அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.