ஏவுகணை மனிதர் அப்துல்கலாமிற்கு டுவிட்டர் சல்யூட் #APJAbdulKalam
சென்னை: கனவு நாயகன், இந்தியாவின் ஏவுகணை மனிதர், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 85வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
சமூக வலைத்தள பக்கங்களில் அப்துல் கலாமின் பொன் மொழிகளை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
#APJAbdulKalam என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி முதலிடத்தில் உள்ளது.
மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், சாமானிய மனிதர்கள் என அனைவரும் அப்துல் கலாமிற்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
|
மத்திய அமைச்சர் சல்யூட்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அப்துல் கலாமின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
|
கலாமின் கதை கார்டூன் வடிவத்தில்
அப்துல் கலாமின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்டூன் வடிவத்தில் கதையாக தயாரித்து சிறுவர்களுக்கு புரியும் வகையில் விளக்கியுள்ளனர்.
|
கலாமிற்கு பாகுபலி மீம்ஸ்
கலாம் மறைந்தாலும் அவரது நினைவுகள், கருத்துக்கள் இந்திய இளைஞர்களிடையே உந்து சக்தியாக செயல்பட்டு இந்தியாவை உயர்த்தும் என்பதை பாகுபலி மீம்ஸ் மூலம் உணர்த்தியுள்ளனர்.
|
கலாமின் பொன்மொழிகள்
டுவிட்டர்வாசிகள் சிலர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பதிவிட்டு அவரது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.