For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் குழந்தைகள் விற்பனை.. ஆசிரியர் உள்பட 9 பேர் கைது

பச்சிளம் குழந்தை விற்பனை விற்பனை தொடர்பாக ஆசிரியர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: பச்சிளம் ஆண் குழந்தையை 2.15 லட்சம் ரூபாய்க்கு விற்ற விவகாரத்தில் களக்காடு ஆசிரியர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்தவர் அருணாசலம்-தேவிகா தம்பதியிடம் ஆண் குழந்தையை ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த கீழப்பாவூரை சேர்ந்த நயினார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆலங்குளம் ஆர்சி தெரு ஆறுமுகம், சிவநாடனூர் தங்கபாண்டி, மேலப்பட்டமுடையார் பரமசிவன், கீழப்பாவூர் சேர்மன், சம்பவர் வடகரை பிள்ளைபெருமாள் மனைவி பொன்னுத்தாய், கடையநல்லூர் ஜிந்தாமாதர் மனைவி எஸ்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

9 arrested for alleged Rs. 2.15 lakh baby sale again

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஆண் குழந்தையை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை.

இதனால் தம்பதியினர் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஈரோட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தையை ரூ.2.15 லட்சம் கொடுத்து ஓரு கும்பலிடம் இருந்து வாங்கினர். தத்தெடுக்க முறையான ஆவணங்கள் இல்லாததால் வில்சன் அதற்கான ஆவணத்தை கும்பலிடம் கேட்டார். வில்சனுக்கு உரிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.

குழந்தை விற்பனை தொடர்பாக கூடுதல் பண பரிவர்த்தனை ஆலங்குளத்தில் வைத்துதான் நடந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டது. இதை கவனித்த பொதுமக்கள் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

வில்சன் தம்பதியினருக்காக கீப்பாவூரை சேர்ந்த மயில்ராஜ், ஈரோட்டை சேர்ந்த செல்வி என்பவர் மூலம் ஓரு பெண்ணிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை பெற்றுள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் கேட்டதால் அவர்களுக்குள் பிரச்சனையாகி 9 பேர் சிக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

English summary
9 were arrested by police for selling new born baby for Rs. 2.15 lakh in Marthantam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X