For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே துவரங்குறிச்சியில் பயங்கர விபத்து- 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பலி

திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

By Madhivanan
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே துவரங்குறிச்சியில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு 15 பேருடன் வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேன் திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது இன்று அதிகாலை பயங்கரமாக மோதியது.

trichy accident

இந்த விபத்தில் சிக்கி 5 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தோரில் ஓட்டுநர் ராகேஷ் (ஆரால்வாய் மொழி), கார்த்திக் (பின்னாகுளம்), தானம்மாள் (நாகர்கோவில்), வைஷ்ணவி(வடசேரி), வேலாதேவி(பின்னாகுளம்), வைத்திலிங்கம் (கோட்டாறு) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

English summary
10 persons were killed and 5 others injured in road accident near Trichy on Thursady.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X