திருச்சி அருகே துவரங்குறிச்சியில் பயங்கர விபத்து- 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பலி
திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருச்சி: திருச்சி அருகே துவரங்குறிச்சியில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு 15 பேருடன் வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேன் திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது இன்று அதிகாலை பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கி 5 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#FirstVisual | திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலையோரம் நின்றிருந்த போர்வெல் லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு..#ACCIDENT #Breaking pic.twitter.com/zVx0BjiKz1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 6, 2017
இது தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தோரில் ஓட்டுநர் ராகேஷ் (ஆரால்வாய் மொழி), கார்த்திக் (பின்னாகுளம்), தானம்மாள் (நாகர்கோவில்), வைஷ்ணவி(வடசேரி), வேலாதேவி(பின்னாகுளம்), வைத்திலிங்கம் (கோட்டாறு) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.