For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ தேர்வில் கலக்கிய கைதிகள்.. எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் டூ தேர்வில் கைதிகளும் கலக்கியுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸாகியுள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகளே இந்த முறையும் மாணவர்களை ஓவர்டேக் செய்து அசத்தியுள்ளனர்.

97 prisoners pass +2 exams

இந்த நிலையில் பிளஸ்டூ தேர்வை 103 சிறைக் கைதிகளும் எழுதியிருந்தனர். பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள். இதில் 97 பேர் பாஸாகியுள்ளனர். 6 பேர மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர்.

பாஸான 97 பேரில் 94 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

திருச்சி சிறை கைதி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

English summary
Among the 103 prisoners, who appeared for +2 exams, 97 prisoners have passed successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X