99 வயது தாத்தா செய்யும் காரியமா இது.. நினைத்தாலே வயிறு எரிகிறது!
10 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: நாளுக்கு நாள் வன்மமும், காமமும் தலைதூக்கி தாண்டவமாடி கொண்டிருக்கிறது என்பது தற்போதைய நிகழ்வுகள் காலக்கண்ணாடியாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது. வயதுக்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு பெரியவர்களுக்கு கொஞ்சமும் வேண்டாமா?
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியின் அருகே உள்ள பகுதி சென்னீர்குப்பம். இங்கு வசிப்பவர் பரசுராம். இவர் தனது வீட்டில் குடியிருந்த 5-ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவருக்கு வயதோ 99.
அதிக அளவு பாலியல் தொல்லைக்கு ஆளானதால், அழுதவாறே சிறுமி பெற்றோரிடம் முறையிட, பெற்றோரோ, ஆவடி மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசாரோ அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பரசுராமரை போக்சா சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதையடுத்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
99 வயதில் இவ்வளவு கீழ்த்தரமான புத்தியும், வக்கிரமும் கொண்ட இந்த முதியவர் செயலினால் காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 விஷயம் முக்கியமாக சொல்ல வேண்டி உள்ளது. ஒன்று,போக்சா சட்டத்தின்கீழ் இவ்வளவு வயதானவர் கைது செய்யப்படுவதுதே இதுவே முதல் முறையாம். இரண்டாவது, இந்த 99 வயது முதியவர் ஓய்வு பெற்ற ஒரு தலைமை ஆசிரியராம். எங்கேதான் போய் முட்டிக்கொள்வது?