அரசு பேருந்தில் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி.. திருத்தணி அருகே சோகம்
திருத்தணி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவன் ஒருவன் படியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்து இருக்கிறான்.
திருவள்ளூர்: திருத்தணி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவன் ஒருவன் படியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்து இருக்கிறான்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவன் விஜய் (14). விஜய் அருகில் உள்ள கீச்சலம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் இவர் படித்து வந்தான்.
விஜய் வழக்கம் போல் பள்ளிக்கு நெடுகலில் இருந்து கீச்சலத்திற்கு பேருந்தில் சென்று உள்ளார். படியில் தொங்கி கொண்டு சென்ற போது கீழ்நெடுங்கல் கூட்டு சாலையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் விஜய் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் சிகிச்சை பலயின்றி உயிரிழந்தான். இது குறித்து தற்போது பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.