For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடைகளை களைந்து ஆபாச வீடியோ.. கத்தி முனையில்.. வாய்பேசமுடியாத சிறுமி பலாத்கார வழக்கில் திடுக் தகவல்

சென்னையில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் பலாத்காரம்

    சென்னை: அயனாவரத்தில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது தாய் அவரை பரிசோதித்தார்.

    தொடர்ந்து பலாத்காரம்

    தொடர்ந்து பலாத்காரம்

    அப்போது அவர் பல மாதங்களாக பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியிடம் பேசி யார் யார் இதில் ஈடுபட்டது என விசாரித்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

    போதை மருந்து கொடுத்து

    போதை மருந்து கொடுத்து

    அதில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கவாலாளி, பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 15 பேரை அடையாளம் காட்டினார் அந்த சிறுமி. மேலும் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்தும் மயக்க ஊசி போட்டும், போதை மருந்து கொடுத்தும் அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியுள்ளன அந்த மனித மிருகங்கள்.

    டாய்லெட்டில் வைத்து

    டாய்லெட்டில் வைத்து

    மேலும் சிறுமியின் ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காட்டி கத்தி முனையில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும் ஆள் நடமாட்டமில்லாத மொட்டை மாடி, டாய்லெட், ஜிம் என பல இடங்களுக்கு அந்த சிறுமியை தூக்கி சென்று வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

    18 பேர் கைது

    18 பேர் கைது

    கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்களாக நாள்தோறும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காவலாளி, பிளம்பர் என 18 பேரை கைது செய்துள்ளனர்.

    காலி சிரஞ்சுகள்

    காலி சிரஞ்சுகள்

    மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி சிரஞ்சுகள், காலி மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 18 பேரில் 8 பேரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் பரபரப்பு

    சென்னையில் பரபரப்பு

    18 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளையும் பதிந்துள்னர்.
    வாய் பேச முடியாத காது கேளாத சிறுமியை 18 பேர் சேர்ந்து சீரழித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A 13 year old physically challenged girl raped by 15 persons for last 7 months in the apartment at Chennai Aynavaram. 18 persons have been arrested in the Pocso act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X