11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்.. நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலியில் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: நெய்வேலியில் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கீழ்பாதி கிராமம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். 60 வயதான இவர் விவசாயி ஆவார்.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசிய அவர் அவரது ஆடைகளை களைந்து தவறாக நடந்துள்ளார்.
கெஞ்சிய சிறுமி
பின்னர் என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாத 11 வயது சிறுமியை ராமச்சந்திரன் பலாத்காரம் செய்தார். பின்னர் தனக்கு தவறு நடப்பதை உணர்ந்த சிறுமி விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.
வெறித்தீர பலாத்காரம்
ஆனால் அதனை காதில் போட்டுக்கொள்ளாத அந்த முதியவர் தனது வெறி தீர சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார் அந்த முதியவர்.
வீட்டிற்கு வந்த பெற்றோர்
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர்.
நடந்ததை கூறி கதறிய சிறுமி
அப்போது சிறுமி அழுது கொண்டிருந்தாள். எதற்காக அழுகிறாய் என்று கேட்டதற்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினாள்.
பெற்றோர் அதிர்ச்சி
இதைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்தனர்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதி
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.