ருக்மணி பாட்டியை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி.. குழந்தை கடத்த வந்ததாக கூறி மூதாட்டி அடித்து கொலை
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விருத்தாசலம் அருகே மூதாட்டி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விருத்தாசலம் அருகே மூதாட்டி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் பெண்ணாடம் அருகே உள்ளது வால்பட்டறை. இங்கு 60 வயது லட்சுமி அம்மாள் என்ற மூதாட்டி வந்தார்.
அவரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்த கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூதாட்டி கொலை
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறிபோகும் உயிர்கள்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூதாட்டியை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். குழந்தை கடத்தல் வதந்தியால் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை ஏராளமான உயிர்கள் பறிபோயுள்ளன.
கொல்லப்பட்ட ருக்மணி
அண்மையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி திருவண்ணாமலை அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்டார்.
தலைதூக்கும் படுகொலை
குழந்தைகளுக்கு அவர் சாக்லேட் கொடுத்ததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரை அடித்தே கொன்றனர். இதுபோன்ற படுகொலைகள் காவல்துறையினரின் எச்சரிக்கையால் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படுகொலைகள் தலைதூக்க தொடங்கியுள்ளன.