For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவண்ணாமலை அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி.. பீதியில் கிராம மக்கள்
திருவண்ணாமலை அருகே டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சையத். இவரது 8 வயது மகன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான்.
இதையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சைப்பலனின்றி சிறுவன் இன்று உயிரிழந்தான்.
இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
A 8 years old boy died in Thiruvannamalai due to dengue fever. Peole demands to take prevention action to stop dengue.
Story first published: Thursday, July 13, 2017, 15:04 [IST]