For Quick Alerts
For Daily Alerts
Just In
வேலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 4 பேர் பலி!
வேலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்: ஆம்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் எதிரெதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்தனர். பச்சிக்குப்பம் என்ற இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் 2 பேர் உட்பட 4 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்காரணமாக ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
English summary
A accident near in Vellore district Ambur highways. Two Lorries hit each other. four died including 2 drivers.
Story first published: Saturday, July 22, 2017, 9:31 [IST]