For Daily Alerts
Just In
சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
சென்னை: சென்னை சேத்துபட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஹோட்டலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
சென்னை சேத்பட் ஸ்பர்டேங்க் சாலையில் 4 மாடி கொண்ட புதிய ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திலேயே கட்டடம் கட்டும் பணியாளர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பணியாளர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
A building of newly constructing hotel building collapses and 2 were died in this incident in Chennai.