For Quick Alerts
For Daily Alerts
Just In
பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. சாலையோர கடைக்குள் பேருந்து புகுந்ததால் பரபரப்பு!
பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து ஒன்று சாலையோர கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
சாலையோர கடைக்குள் புகுந்த பேருந்து- வீடியோ
திண்டுக்கல்: பழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து ஒன்று சாலையோர கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி நால்ரோடு பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதானல் திடீரென சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் சலையோரத்தில் இருந்த கடைக்குள்ளும் பேருந்து புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து வலிப்பால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Comments
English summary
A Bus has gone into a roadside shop after the driver gets Epilepsy near in Pazhani. Seven two wheeler damaged in the accident.
Story first published: Wednesday, January 24, 2018, 10:25 [IST]