For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் பலி! - வீடியோ

விழுப்புரம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.

By Suganthi
Google Oneindia Tamil News

விழுப்புரம்: சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது.

A car hit on lorry and six died near viluppuram

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று லாரியின் மீது மோதியது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று விழுப்புரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே லாரிகள் நிற்க அனுமதியளிகக்பப்ட்டுள்ளது. ஆனால் கனரக லாரி ஓட்டுநர்கள் சாலையில் இருமருங்கிலும் லாரியை நிறுத்தி வைப்பதால் இவ்வாறான விபத்துகள் நிகழ்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
A car hit on Lorry which was stopped road side near Viluppuram. In that accident 6 persons died there itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X