For Quick Alerts
For Daily Alerts
Just In
திருத்தணி அருகே கார் சாலையில் கவிழ்ந்து விபத்து... 3 பேர் பலி
திருத்தணி அருகே கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவள்ளூர்: திருத்தணி அருகே கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திப்பட்டி என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓரத்தில் இருந்த கல்லின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A car met with an accident near in Thiruthani three dead on the spot. Three people injured severely.
Story first published: Monday, November 27, 2017, 19:56 [IST]