For Daily Alerts
Just In
சென்னையில் பயங்கரம்.. பாதாள சாக்கடை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர் விஷவாயு தாக்கி பலி
சென்னை கீழ்கட்டளையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது மாநகராட்சி ஊழியர் இரணியப்பன் விஷ வாயு தாக்கிஉயிரிழந்தார்.
சென்னை : சென்னை கீழ்கட்டளையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மாநகராட்சி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை ஓட்டேரியைச் சேந்தவர் இரணியப்பன், இவர் இன்று சென்னை கீழ் கட்டளை பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிக்கு சென்றுள்ளார். பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மாநகராட்சி ஊழியர் இரணியப்பன் உயிரிழந்தது குறித்த தகவல் அறிந்த பல்லாவரம் காவல் எல்லை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டமும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தாலும் தொடர்ந்து இது போன்ற உயிரிழப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.
Comments
English summary
A corporation scavenger Eraniyappan died while drainage cleaning affected by deadly gas in Keelkattalai, He was from Otteri in Chennai.
Story first published: Friday, June 22, 2018, 18:40 [IST]