For Daily Alerts
Just In
சென்னையில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை: சென்னையில் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ்) வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியிலுள்ள பயிற்சி மையத்தில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்த வீரர் ஹரியானாவை சேர்ந்த ராஜேஷ்குமார் என்று தெரியவந்துள்ளது.
பணியின்போது, செல்போனில் பேசியதற்காக, அதிகாரிகள் வழங்கிய தண்டனையால் மனமுடைந்து ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்எல்ஆர் வகை நவீன துப்பாக்கியால், ராஜேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
A CRPF soldier committed suicide by shot himself dead in Chennai.