For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. திருப்பூரில் டாக்டர் 'அட்டகாசம்'

திருப்பூரில் சிகிச்சைப் பெறவந்த பெண்ணிடம் டாக்டர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் சிகிச்சைப் பெறவந்த பெண்ணிடம் டாக்டர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் நகரில் தாராபுரம் சாலையில் பாலசுப்ரமணியம் என்ற மருத்துவரி மருத்துவமனை நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு 38-வயது மதிக்கதக்க பெண் ஒருவர், மூட்டுவலி காரணமாக சிகிச்சை பெற கடந்த புதன்கிழமை மாலை வந்துள்ளார்.

A doctor given sexual harassment to the patient in Tirupur

அப்போது, அந்தப் பெண்ணின் முழங்கால் பகுதியை பரிசோதித்த பாலசுப்ரமணியம், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி திருப்பூர் போலீஸில் புகார் அளித்தார்.

இதுகுறித்து பெண்கள் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வருகின்றனர். சிகிச்சைப் பெற வந்த பெண்ணுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A doctor given sexual harrasment to the patient in Thirupur. Police filed case against the doctor and searching for the absconding doctor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X