For Daily Alerts
Just In
போதையில் அரசு அலுவலகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது - வீடியோ
குடிபோதையுடன் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பெண் ஊழியரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை: கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் வந்து தகராறு செய்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரஞ்சித் என்ற வழக்கறிஞர் வழக்கு விஷயமாக வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் அலுவலகத்துக்குள் வந்ததுடன், அலுவலக பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை வீசியெறிந்து சேதப்படுத்தியுள்ளார். அதையடுத்து போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட, அங்கு வந்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
A drunken lawyer came taluk office and abused a government employee. And police arrested drunken lawyer